Posts

Dharbai தர்பை

தர்ப்பையும், ரகசியமும். *நம் முன்னோர் நமக்கு அளித்த பல நடைமுறைகள் எல்லாம், நம் வாழ்வின் நலனுக்காக அமைந்தவையே!* நாம் அவற்றின் காரணத்தை உணராமல்,  அவற்றை நவீன கண்டு பிடிப்புகளுடன் ஒப்பிட்டு, அதன் எளிமையான பயன் பாட்டையே நாம் புறக்கணிக்கிறோம்... அப்படி நமது முன்னோர்கள் வகுத்த வாழ்வியல், மருத்துவம், நெறியில்,  ஒரு சூட்சுமான செயல்பாடு தான் தெய்வீகமான தர்ப்பை புல் பயன்பாடு. தர்ப்பை புல் மனிதனுக்கும் இறைவனுக்கும் தொடர்பு தரும் சாதனமாக, வேதங்களின் மூலம் அறியப்படுகிறது... உலகம் தோன்றிய போதே தோன்றிய தொன்மையான புல் என தர்ப்பை புல்லை முன்னோர்கள் போற்றுவர். அனைத்து தெய்வீக பூஜை வழிபாடு செய்யக்கூடிய தர்ப்பை புல்லின்  உச்சியில் சிவபெருமானும்,  மத்தியில் பிரம்மனும்,  அடியில் மகா விஷ்ணுவும் இருப்பதாக ஐதீகம்... தர்ப்பை புல் காய்ந்தாலும், அதன் தன்மை மாறாது உயிர்ப்புடன் இருக்கும் என்பதே தர்ப்பை புல்லின் சிறப்பாகும்.  தர்ப்பை புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது, நீருக்குள் பல நாட்கள் கிடந்தாலும் அழுகாது.  இந்து சமய சடங்குகளில், பிறப்பில் இருந்து கடைசி இறப்பு வரை முக்கிய இடம்...

ருண விமோசன பிரதோஷம்

ருண விமோசன பிரதோஷம் நாம் முற்பிறவியில் பட்ட கடன்களைத் தீர்க்கவே மறுபடியும் பிறக்கிறோம் என்பது சாஸ்திரம் சொல்லும் பிறவி ரகசியம். ஆனால், பட்டகடனை தீர்க்க வேண்டி மறுபடியும் பிறக்கும் நாம், மேலும் மேலும் கடனாளியாகி, முடிவில்லாத பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கிறோம். கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்ற அளவுக்கு இன்றைய பொருளாதார ச் சூழல் உருவாகிவருகிறது. பேராசையும், பொருள்களை வாங்கிக் குவிக்கும் மனோ பாவமும் ஒவ்வொருவரையும் கடன்காரரா க மாற்றிவருகிறது. 'கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று சொல்வார்கள். நாளும் கடன் பிரச்னைகளால் கலங்கித் தான் வருகிறோம். இதோ நமது பிறவிக் கடன், பொருளாதாரக்கடன் எல்லாவற்றை யும் போக்க உதவும் திருநாள். செவ்வாய்க்கிழமையன்று வரும் பிரதோஷம்,  'ருண விமோசன பிரதோ ஷம்’ என்று அழைக்கப்படுகிறது. 'ருண’ என்றால் கடன். கடன் தொல்லைகளில் இருந்து விமோசனம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு இன்று நடைபெற உள்ளது. செவ்வாய் பகவான் ருண ரோகத்துக்கு காரக த்துவம் வகிப்பவர். இவரே கடன் தொல்லை உண்டாகவும் அவரை வழிபட்டால் கடன்களை த் தீர்க்கவும் அருளுவார். செவ்வாய்க்கிழமை அன்று வ...

4 நான்கு நாலு

4444 அப்படி இந்த ‘நாலு’க்கு  என்னதாங்க ஸ்பெஷல். 01. ‘நாலு’ பேரு ‘நாலு’ விதமா பேசுவாங்க. 02. ‘நாலு’ பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.  03. ‘நாலு’ காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல....???? 04. ‘நாலு’ ஊரு சுற்றினாதான் உலகம் புரியும். 05. அவரு ‘நாலு’ம் தெரிஞ்சவரு.,  ‘நாலு’ம் புரிஞ்சவரு.  06. ‘நாலு’ வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும். ஏன் இந்த ‘நாலு’ மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்.... சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்., பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு., நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு., பிரபந்தத்தில் நாலாயிரம் என  ‘நான்கு’ வரும். நாலடியார்., நான்மணிக்கடிகை.,இன்னா நாற்பது., இனியவை நாற்பது அக நானூறு., புற நானூறு., நாலாயிர திவ்ய பிரபந்தம்.... “பாலும்., தெளிதேனும்., பாகும்., பருப்பும் இவை ‘நாலு’ம் கலந்து உனக்கு நான் தருவேன்” ஔவையாரின் ‘நால்’வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல். நாலும்., இரண்டும் சொல்லுக்குறுதி... இதில் ‘நாலு’ என்பது.. நாலடியார்.... “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது ‘வேதம் நான்கினும்’ மெய்ப்பொ...

சூரியன் கண்கண்ட தெய்லம்

ஞாயிற்றுக்கிழமை. சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' என்பது ஆன்றோர்கள் வாக்கு. வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் அருளும் சூரியனை நாம் கடவுளாக வணங்குகிறோம். வேதங்கள் சூரியனை 'ஆயுளை வளர்க்கும் அன்ன ரூபம்' என்று போற்றுகின்றன. நம்முடைய பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் தமிழகத்தில் 'உச்சிகிழான் கோட்டம்' என்ற பெயரில் சூரியபகவானுக்கான கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது.  சூரியவழிபாடு அவசியம்.  சூரியன் பிரத்யட்ச மான தெய்வம். எல்லாருமே கண்களால் கண்டு வணங்கக்கூடிய தெய்வம். சூரிய வழிபாடு அனைவருக்கும் பொதுவான வழிபாடு. உலக உயிர்கள் அனைத்தையும் தன் ஒளியினால் வாழவைப்பவர் சூரியன். சூரியனை விச்வரூப விராட்புருஷனாகிய விஷ்ணுவின் கண்களிலிருந்து தோன்றி வந்தவர் என்று சொல்வார்கள். அந்த ஆதிபுருஷனுடைய நேத்திரம் சூரியன் என போற்றப் படுவதாலேயே சூரியன் நமது கண்களுக்கும் அதிஷ்டான தெய்வமாக இருக்கிறார். ஆஞ்சனேய சுவாமி சூரியனுடன் சஞ்சரித்துக் கொண்டே ஞானோபதேசம் பெற்று "நவவியாகரண பண்டிதன்' என்ற பெருமையைப் பெற்றார். மகரிஷி யாக்ஞ வல்கியர் சூரியனை உபாசித்து சுக்ல யஜுர் வேதத் தைக் கற்றார்...

Putradha Ekadhasi

பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி :- சிரவண மாதம் , சுக்ல பட்சத்தில்  (வளர்பிறை  ) வரும் ஏகாதசி ( 27.8.2023) "கலியுகத்தில் புத்ரதா ஏகாதசியின் மஹிமைகளை இந்த ஏகாதசி தினத்தன்று கேட்பவர்களும், படிப்பவர்களும், நிச்சயம் தங்களது பாவங்கள் நீங்கப்பெற்று, புத்ர சந்தான பிராப்திக்கான அருளாசியைப் பெறுவதோடு, புத்ரர்கள் பெற்றோர்கள் சொல் படி கேட்டு, சற்புத்ரர்களாக திகழ்வார்கள் " பவித்ரோபன ஏகாதசியின் விரத மகிமையைப் பற்றிப் பார்ப்போமா  இந்த பவித்ரோபன ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி மஹாவிஷ்ணுவே யுதிஷ்டிரரிடம் கூறியிருக்கிறார். மஹாராஜாவான ஸ்ரீ யுதிஷ்டிரர், கிருஷ்ண பரமாத்மாவிடம் "அரக்கன் மதுவை அழித்ததால் "மதுசூதனன்" என்ற திருநாமம் பெற்றவரே !! சிரவண மாதம் , சுக்ல பட்சத்தில்  (வளர்பிறை  ) வரும் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி அறிய விரும்புகிறேன். ஆகையால் கிருஷ்ண பரமாத்வாவே தயை கூர்ந்து இந்த ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை விரிவாக சொல்லுங்கள்" என்று வேண்டிக் கொண்டார். முழுமுதற் கடவுளான கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரிடம், "மஹாராஜனே, இந்த ஏகாதசி தினத்தைப் பற்றி நீ அறிந்து கொள்ள வேண்டும...

கருங்காலி

கருங்காலி மரத்தின் சிறப்பு பற்றி இதுவரை அறியாத பல அபூர்வ ரகசியங்களை உங்களிடம் இன்று சித்தர்களின் குரல் வாயிலாக இன்று விரிவாக பகிர்கிறேன். படத்தில் இருக்கும் மரம்தான் #கருங்காலி_மரம் இந்த மரம் மிகவும் அபூர்வமான மரங்களில் ஒன்று. இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த மரத்துண்டுகளை #கோவில்_குடமுழுக்கின் போது கலசத்தை நிலை நிறுத்த பயன்படுத்துவார்கள். அது பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்ரகத்தின் அடியில் சில தகடுகள் பதிகப்பட்டு இருக்கும்  அந்த சக்தியுடன் கலந்து நமக்கு அபரிதமான சக்தியை வழங்கும் இது பழங்கால கோயில்களில் உணரலாம் . இந்த மரத்திற்கு #negative_energy அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதனாலே இந்த மரத்தல் ஆனா #சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள்.  இந்த மரத்திற்கு வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்தி உண்டு. அக்காலத்தில் பெரும் செல்வந்தர்கள் #walking_stick கருங்காலி மரத்தால் ஆனது, கெட்ட ஆத்மா தன்னை பித்தொடராமல் இருக்க, தானியங்கள் குத்...

Bio borders

கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில். ஒரு பெண்மணி கேட்டார் மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே. வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது. என்று. அதற்குப் பதிலளித்தார்.  ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவமுள்ள ஒரு அதிகாரி:                             முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு,கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை. இந்த இட்டேரி என்பது ஒரு தனி உலகம். இதை நான் Itteri eco-system என்று அழைப்பேன். கள்ளி வகைகள், கிளுவை போன்ற முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா,பூவரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும்.இவை உயிர்வேலியாய் விவசாய நி...