கோரக்கர் சித்தர்
கோரக்கர் வரலாறு: அடுப்புச் சாம்பலில் இருந்து வெளிப்பட்டு, பல அற்புதங்களை நிகழ்த்திய கோரக்கர் சித்தரின் பெருமையை இங்கே பார்க்கலாம். கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். இவர் வட இந்தியாவை சேர்ந்த கோரக்கர் (மராட்டியர்) ஆயினும் தமிழ்நாட்டில் உள்ள சதுரகிரியை நோக்கி பயணம் செய்து போகரை தோழராகக் கொண்டார். சட்டைமுனி, கொங்கணர் இவருக்கு நெருக்கமானவர்கள். கோரக்கர் இறப்பில்லா மகாயோகி என்றும் அவர் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்ததாக தொன்மங்கள் உரைக்கின்றன. கோரக்கர் கொல்லி மலைச்சாரலில் உள்ள சம்பல் பட்டியில் பிறந்தவர். இவர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் வசிஷ்ட மகிரிஷிக்கும் ஒரு குறவர்குடிப் பெண்ணிற்கும் மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 18 சித்தர்களில் ஒருவர். இவர் சித்தர்களான அகத்தியர் மற்றும் போகர் ஆகியோரின் மாணவராக இருந்தார். போகரின் பல்வேறு படைப்புகளில் கோரக்கர் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஜீவ சமாதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்கு பொய்கை நல்லூரில் உள்ளது. இவர் த...