ஒற்றுமை சந்தோஷம் Happiness
உங்கள் குடும்பம் உறவுகளுடன் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக வாழ...... பிரிந்த உறவுகள் ஒன்றுசேர வேண்டும் என்றாலும் மனப்பூர்வமாக இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து வாருங்கள். நிச்சயமாக உங்களுடைய குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக ஒற்றுமை இருக்கும். சண்டை சச்சரவுகள் குறையும். தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசியுடன் வெல்லத்தை கலந்து பசுமாட்டிற்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும் . இந்த பச்சரிசியையும் வெல்லத்தையும் எதற்காக பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் கள் என்பதற்கான உள் அர்த்தத்தையும் தெரிந்து கொள்வோமா. பொதுவாகவே பச்சரிசிக்கும் வெல்லத்திற்கும் நினைவூட்ட கூடிய சக்தி அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த பச்சரிசியை யும் வெள்ளத்தையும் பசுமாடு என்று மட்டும் கிடையாது. பசுமாடு தவிர நீங்கள் வேறு எந்த ஜீவராசிக்கும் சாப்பிடுவதற்காக உணவாக கொடுத்தாலும், அந்த ஜீவராசி உங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ளும். எடுத்துக்காட்டிற்கு ஆடு கோழி பூனை இப்படி எந்த உயிரினத்திற்க்கு நீங்கள் உங்கள் கையால் இந்த பச்சரிசியையும் வெல்லத்தையும் கொடுத்தீர்கள் என்றா...