Posts

Showing posts from September, 2021

8 எட்டு

https://www.youtube.com/watch?v=tSspKHYbPo4 எட்டுக்கு இணை ஏதுமில்லை! எட்டாம் நம்பர் சிறப்பு!!: நம்மவர்களுக்கு எட்டு என்ற எண்ணைக் கேட்டாலே ஒரு பயம்.  அந்த எண்ணில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு அமைந்து விட்டாலோ எப்போது இது வெட்டுமோ? என்ற எண்ணம் வந்து வந்து பயமுறுத்தும்.  நாட்களிலே அஷ்டமி என்றால் ஐயோ! வேண்டாம் என்பார்கள்.  இன்னும் சிலருக்கு 8 என்ற எண்ணைப் பார்த்தாலே அச்சம்.  அதன் கோணலே அவர்களுக்குப் பிடிக்காது.  சோதிடர்கள் ஒருவரிடம் உனக்கு அஷ்டமத்துச்சனி என்று சொல்லிவிட்டால் போதும், சனி அவரைப் பாடாய்ப் படுத்துகிறதோ இல்லையோ; அந்த அஷ்டமம் அவர்கள் மனத்தைப் பாடாய்ப் படுத்திவிடும்.  எட்டைப் பற்றிய உண்மையான செய்திகளைத் தெரிந்து கொண்டால் நம் வீணான அச்சம் தொலையும்.  எட்டின்மேல் நமக்குப் பாசம் வருகிறதோ இல்லையோ! ஆனால் ஒரு பக்தி தோன்றும். எண்ணிப்பார்த்தால் எல்லாமே எட்டுக்குள்தான் என்ற ஞானம் தோன்றும். மனிதப் பிறப்பில் எட்டாம் மாதம் ஒரு திருப்புமுனை.  தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்ச்சி பெறுகிறது.  அப்போது கருப்பையில் இடம் போதாமல் நெருக...

கொல்லூர் மூகாம்பிகை

 கொல்லூர் மூகாம்பிகை - கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் தமிழக ஆலய அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது.  இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது. கோவில் அமைப்பு கோவில்களின் அமைப்பும், கட்டிட தொழில் நுட்பமும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தமிழ்நாட்டில் பிரமாண்ட பிரகாரங்கள், கலர்கள், கோபுரங்கள் இருக்கும். மற்ற மாநில ஆலயங்களில் அப்படி பார்க்க முடியாது. அந்த வகையில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் தமிழக ஆலய அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது. இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது. ஸ்ரீமூகாம்பிகை கோவில் கர்நாடகத்தில் இருந்தாலும் கேரள கோவில்களின் அமைப்புகளையும், பாணியையும் ஒத்திருக்கின்றது.  கிழக்கு கோபுரவாயிலை 1996ம் ஆண்டு புனர் நிர்மானம் செய்து பழைய அமைப்பு மாறாமல் கருங்கற்களால் கட்டியுள்ளார்கள். இக்கோவிலின் கருவறை விமானம் முழுவதும் தங்கத் தட்டினால் வேயப்பட்டதாகும். எல்லா கோவில்களை போல முதலில் நம் கண்ணில் தென்படுவது கொடிக்கம்பம். அம்பாளின் கர்பக்கிரகம் கொடிக் கம்பத்தை ஒட்டியிருப்பது...

புரட்டாசி மாத விரதங்களும் பலன்களும்

புரட்டாசி மாத விரதங்களும் பலன்களும் புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மாதத்தில் வருகிறது. சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் முன்னோர்கள் வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மகாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது. கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. கன்னி மூலையில் அமைந்திருக்கும் விநாயகரை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். இந்த விரத வழிபாடுகள் மகாலட்சுமிக்கும் உகந்தவை. புனித மிக்க புரட்டாசி மாதத்தில் விரதங்கள் கடைபிடித்தால் அதிகம் புண்ணியம் கிடைக்கும். மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை. புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்...

திதி தேவதைகளின் தியான ஸ்லோகங்கள்

 திதி தேவதைகளின் தியான ஸ்லோகங்கள் ----------------------------------------------------------------- பிரதமை திதியின் அதி தேவதையான அக்னி தேவனின் தியான ஸ்லோகம்: ஏஹி ஸாக்ஷாதிஹாக்னே த்வம் தேவானாம் ஹவ்யவாஹகா / ஸாந்திகர்மணி பூஜார்திமேதாம் மூர்த்திம் ஸமாவிஸா // Yehi sakshadhihaagne thvam dhevaanam havyavaahakaa / Saanthikarmanee poojaarthimethaam moorthim samavisaa // துவித்தியை திதியின் அதி தேவதையான த்வஷ்டாவின்  தியான ஸ்லோகம்: த்வஷ்டார்ஜகத்  த்ரயீ  தாதா: பூ நீஹி தயயாமஹீம் / ப்ரதிமாயாம்முஷ்யாம் த்வம் ஸந்நிதத்ஸ்வ சதுர்முகா// Thvastaarjagath thrayee dhaathaha pooneehi dhayayaamaheem / Prathimaayaammushyaam thvam sannithathsva chathurmukha // திருதியை திதியின் அதி தேவதையான பார்வதி தேவியின்  தியான ஸ்லோகம்: ப்ரதிமாயாம்  ஹிரண்மய்யாமேஹி பர்வதகன்யகே / நமஸ்யாமி பதாப்ஜம் தே பூமர்தி ப்ரத்திபதயே // Prathimaayaam hiranmayyaamehi parvathakanyake / Namasyaami padhabhjam they poomarthi prathipaththaye // சதுர்த்தி  திதியின் அதி தேவதையான கஜனானனுடைய (கனேசன்) தியான ஸ்லோகம்: விக்...

பஞ்சபாத்ரம்

  பஞ்சபாத்ரம் என்று ஏன் சொல்லுகிறோம்? அதுக்கு ஏன் அப்பெயர் வந்தது? பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்கள் உண்டு  வேதசத்சங்கம் முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும்  அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர்  ‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்பர் பெரியோர். அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை  பத்திரங்களை (இலைகள்) அதிலுள்ள  நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற  சிறு கரண்டியால் எடுத்து பூஜைக்கு,  ஆராதனைகளுக்கு பயன்படுத்துவதால்  அப்பெயர். அது என்ன பஞ்ச பத்ரம்? அதுவா துளசி, அருகு, வேம்பு, வில்வம்,  வன்னி ஆகிய இலைகளே பஞ்ச  பத்திரங்கள் என்பர். இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும்  பாத்திரம் ‘பஞ்ச பத்ர பாத்திரம்’.  இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச  பாத்திரம் என்றானது. இந்த பத்திரங்கள் மூலிகைகளாகும்.  இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை  பூஜைகளுக்கு ஏற்றவை. இப்படியாக ஐந்து இலைகளையும்  பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து  அர்க்யம்,பாத்யம், ஆசமனியம் என  தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம்  பஞ்ச பத்ர பாத்திரம் என்று  அழை...