Posts

Showing posts from February, 2023

ஜபம் மந்திரம்

https://youtu.be/W60rC2ZumOE https://youtu.be/gZB_2aSzn94 மூன்று வகை அழுக்குகள் மன அழுக்கு    2. வாய் அழுக்கு         3. உடம்பு அழுக்கு என அழுக்குகள் மூன்று வகை. பொறாமை, பகை, கோபம், ஆசை என்பன மனத்தால் ஏற்படும் அழுக்குகள். இவற்றைத் தியானம் என்ற நீரால் கழுவிக் கொள்ள வேண்டும். பொய் சொல்வது, அடுத்தவனைப் பற்றிப் புறம் சொல்லித் திரிவது, கோள் சொல்வது, தீமையான சொற்களைப் பேசுவது, தெய்வத்தைப் பழிப்பது, ஞானிகளைப் பழிப்பது, நல்ல பெண்களைப் பழிப்பது ஆகியவை வாயால் ஏற்படும் அழுக்குகள். இறைவனைப் பற்றிய மந்திரங்கள், தோத்திரப்பாடல்கள் பாடி இந்த அழுக்கைப் போக்கிக் கொள்ள வேண்டும். கொலை, களவு, பிறா் மனைவியோடு தகாத உறவு முதலியவை உடம்பால் ஏற்படும் அழுக்குகள். அவற்றை  அர்ச்சனை என்ற நீரால் கழுவிக் கொள்ள வேண்டும். மந்திர ஜபம்: ஏற்ற இடங்கள்: வீட்டிலிருந்து ஜபித்தால் ஒருமுறை உருவேற்றியதாகும். பசுக்கொட்டிலிலிருந்து ஜபித்தால் ஒன்று நூறு ஆகும். நந்தவனத்திலிருந்து ஜபித்தால் ஒன்று ஆயிரமாகும். மலைமேலிருந்து ஜபித்தால் ஒன்று பதினாயிரம் ஆகும் நதிக்கரையிலிருந்து ஜபித்தால் ஒன்று லட்சம் ...

திருநீரு / விபூதி

https://youtu.be/2bIypcffG1o https://youtu.be/C_y0ITbb3NE https://youtu.be/D4F7lB_uvMo வில்வ ஓடு விபூதி / திருநீர் விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது! சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி, அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லும் போது, முதலில் நாம் கேட்கக்கூடிய கேள்வி, ‘நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டாயா’ அப்படி என்றுதான் கேட்பார்கள். அந்த அளவிற்கு, நெற்றியில் விபூதியை பூசிக் கொள்வதில் நம்மிடம் நம்பிக்கை இன்றளவும் இருந்து தான் வருகிறது. இந்த விபூதியை நெற்றியில் தரித்துக் கொண்டால், எந்த ஒரு தீய சக்தியும் மனிதர்களை அண்டாது என்பதும் நம்முடைய அனுபவ முறையில் இருந்து வருகிறது. இது முற்றிலுமான ஆன்மீக ரீதியான உண்மையும் கூட. சிவ பக்தர்களுக்கு இந்த உண்மை தெரிந்ததுதானே! சரி, அன்றாடம் நாம் இட்டுக்கொள்ளும் இந்த திருநீரை மேலும் பல மடங்கு சக்தி வாய்ந்த திருநீர்...

கும்ப அபிஷேகம் / கும்பாபிஷேகம்

https://youtu.be/vp6RQxf8L1g https://youtu.be/_VtXkFChBjQ https://youtu.be/CkHy3sriZ8o கும்பாபிஷேகம்_என்பது_என்ன? என்பதை_பற்றிய_விளக்கம் கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன? அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம்!   கும்பாபிஷேகத்தின் வகைகள்.   1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.   2, அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.   3, புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.   4, அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.   கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படு...